Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைமீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது

மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக மீனவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்றிரவு  (திங்கட்கிழமை) குறித்த மீனவர்கள்  மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே   அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்கள் பயன்படுத்திய இரு படகையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறைக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு உட்படுத்தியதன் பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular