2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து சுவிட்சர்லாந்து சென்ற ஈழத்து யுவதியொருவர் மருத்துவராக சாதனை படைத்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்த கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்ற யுவதியே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த யுவதி முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தனது 16 வயதில் கடந்து சுவிட்சர்லாந்திற்கு புலம்பெயர்ந்துள்ளார்.
இதன் பின்னர் சுமார் ஒரு வருடத்தில் சுவிட்சர்லாந்து மொழியினை கற்றுக்கொண்டு 06 மாத காலம் ஆசிரியர் துறையை தேர்ந்தெடுத்து கல்வி பயின்றுள்ளார்.