Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைஆங்கில வகுப்பிற்கு சென்ற மாணவியை காணவில்லை

ஆங்கில வகுப்பிற்கு சென்ற மாணவியை காணவில்லை

மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளார் என காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறியதுடன் மீண்டும் வீட்டிற்கு வருகைத்தரவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் கையடக்க தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் மாணவி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


RELATED ARTICLES

Most Popular