Sunday, December 3, 2023
spot_img
Homeஉலகம்உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் பைடன் உறுதி!

உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகளை வழங்குவதாக அதிபர் பைடன் உறுதி!

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில், ஜி7 மாநாட்டிற்கு இடையே, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார்.

உக்ரைனுக்கு மேலும் 375 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்குவதாக, இச்சந்திப்பின்போது, ஜோ பைடன் உறுதியளித்தார்.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்த, தங்களால் முடித்த அனைத்தையும் செய்து வருவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார்.

முன்னதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலை தனித்தனியே சந்தித்து பேசிய ஜெலென்ஸ்கி, போரில் உக்ரைனுக்கு உதவி புரிவதற்காக நன்றி தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular