Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைஎல்லைதாண்டிய 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

எல்லைதாண்டிய 16 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இரு படகுகளில் எல்லை தாண்டிய மீனவர்களே இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் காரைநகர் கடற்பரப்பில் நான்கு மீனவர்ளும் பருத்தித்துறை கடற்பரப்பில் 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டதோடு இவர்களுடைய இரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அனைவரும் மயிலிட்டித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

RELATED ARTICLES

Most Popular