Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைதனித்து விடப்படும் மஹிந்த – ரணிலுடன் நெருக்கம் காட்டும் மொட்டு உறுப்பினர்கள்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர், மஹிந்த ராஜபக்ஷவை விட்டு விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை வைத்துக்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ச பிரதமராக இருந்தபோது, பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் அவருடன் இணைந்து உணவருந்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

எனினும், தற்போது அவர் பெரும்பாலும் தனியாகவே உண்பதாக கூறப்படுகின்றது.

அவர் பிரதமராக இருந்த காலத்தில், நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, அவரை வரவேற்க ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நுழைவு வாசல் அருகே திரண்டிருந்த நிலையில், இன்று அவர் பாதுகாப்பு பொலிஸ் அதிகாரியுடன்தான் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைகிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு மிக நெருக்கமான இரண்டு அல்லது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அவ்வப்போது அவருக்கு நெருக்கமாக இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular