Saturday, December 9, 2023
spot_img
Homeஇலங்கைகடும் நிபந்தனைகளுடன் ஏ.எச்.எம். பௌசிக்கு பிணையில் செல்ல அனுமதி!

கடும் நிபந்தனைகளுடன் ஏ.எச்.எம். பௌசிக்கு பிணையில் செல்ல அனுமதி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை, கடும் நிபந்தனைகளுடன் பிணையில் செல்ல கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு, சுமார் 10 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியை, 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 100,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில், அவருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு அமைச்சுக்கு, நெதர்லாந்தினால் வழங்கப்பட்ட மகிழுந்து ஒன்றை, தமது தனிப்பட்ட பாவனைக்காக பயன்படுத்தி, அரசாங்கத்துக்கு சுமார் 10 இலட்சம் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular