Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கையாழ் மாநகர முதல்வருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராகவும் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் சபை உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

அண்மையில் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் உறுப்பினர் பா.பத்மமுரளி “வைக்கோல் பட்டறை நாய் போன்று சிலர் செயல்படுவதாக” தெரிவித்தார்.

இதற்காக உறுப்பினர் பா.பத்மமுரளி மாநகர சபை நடவடிக்கையில் பங்கேற்க ஒரு மாததிற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநகர முதல்வருக்கு எதிராகவும் குறித்த தீர்மானத்துக்கு எதிராகவும் அவரால் உள்ளூராட்சி ஆணையாளர் பிரணவநாதனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

RELATED ARTICLES

Most Popular