Wednesday, November 29, 2023
spot_img
Homeஇலங்கைஅதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது.

அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது.

களியாட்ட நிகழ்வில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்று களியாட்ட நிகழ்வில் இந்த சம்பவம் இடமபெற்றது.

கற்றல் நடவடிக்கை மற்றும் நோயாளருக்கு இடையூறு ஏற்படக்கூடிய வகையில் ஒலிபெருக்கியை ஒலிக்ச் செய்த குற்றச்சாட்டில் ஒலிபெருக்கியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் ஒலிபெருக்கிச் சாதன பொருட்கள் அனைத்தும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular