
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் ரஜினிகாந்த். இவருக்கென உலகமுழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார், ஜாக்கி ஷராஃப், தமன்னா போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஜினி விருப்பம்:
ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினிகாந்த் பல இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ரஜினிகாந்த், பிரபல இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜிடம் தன்னை வைத்து படம் இயக்குமாறு கேட்டுள்ளார். மேலும் இந்த படம் தான் என்னுடைய கடைசி படமாக இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் ஆசைப் படுவதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது.
இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜிக்கு 35 கோடி சம்பளம் தருவதாகவும் கூறியதாக சினிமா வட்டாரங்களில் கூறபடுகிறது.