Wednesday, November 29, 2023
spot_img
HomeUncategorizedநீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடமை – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

எனவே, எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது அனைவரதும் தலையாய கடமை என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மகாவலி அதிகார சபையில் அண்மையில் நடைபெற் தேசிய நீர் கொள்கைத்திட்டமொன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடளிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது, நீர்வழங்கல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆலோசனை வழங்கினார்.

இதன்போது, தேசிய நீர் கொள்கையொன்றை உருவாக்குவதற்கு உரிய தரப்பினருக்கு பொறுப்புக்களையும் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும், பஸ்னாகொட நீர்த்தேக்கத் திட்டம் மற்றும் நிலத்தடி நீர்த்தேக்கத் திட்டம் ஆகியவற்றின் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

RELATED ARTICLES

Most Popular